இவ்வளவு நாள் மனதிற்குள் அடைத்திருந்ததை சொல்லிவிட்டாள்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது......
என்னமோ பெரிய பாரம் மனதை விட்டு போனதை போன்ற ஒரு சுகம்
மனதிற்குள் ஒரு பெருவெள்ளம்...
அவள் மேல் இருந்த அன்பும் பாசமும் ஒரே அடியாய் ஆயிரம் மடங்கு அதிகமானதை போன்ற ஒரு உணர்வு....
அவள் கையை பிடித்தாலும் சொர்க்கம் அடைந்த சுகம் தெரிகிறது....
முன்பை போன்றிள்ளாது அவளும் பாசத்தை காட்டுகிறாள்...
இதுவரை சொல்லாத வார்த்தைகளையும் அன்பையும் பொழிகிறாள்..
மனம் அந்த சுகத்தை ரசிக்கிறது...
பொழியும் ஒவ்வொரு முத்தத்திலும் ஒரு புது சுகம்.....
பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் புது அர்த்தத்தை தருகிறது....
நரம்பெல்லாம் வீணை வாசிக்கின்றன....
விரல்களெல்லாம் நடுங்குகின்றன...
உதடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை பிடிக்கின்றன..
வய்ற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன
என்னை தவிர வேறு எவரும் இவ்வளவு சந்தோசமாக இங்கு இருக்கவே முடியாது...
ஹாரிஸ் ஜெயராஜின் 'உயிரே என் உயிரே' எங்கேயோ ஒலிப்பது கேட்கின்றது...
செவ்வாய், 9 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)