செவ்வாய், 9 ஜூன், 2009

சொல்லிவிட்டாள்...

இவ்வளவு நாள் மனதிற்குள் அடைத்திருந்ததை சொல்லிவிட்டாள்
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது......

என்னமோ பெரிய பாரம் மனதை விட்டு போனதை போன்ற ஒரு சுகம்
மனதிற்குள் ஒரு பெருவெள்ளம்...

அவள் மேல் இருந்த அன்பும் பாசமும் ஒரே அடியாய் ஆயிரம் மடங்கு அதிகமானதை போன்ற ஒரு உணர்வு....

அவள் கையை பிடித்தாலும் சொர்க்கம் அடைந்த சுகம் தெரிகிறது....

முன்பை போன்றிள்ளாது அவளும் பாசத்தை காட்டுகிறாள்...

இதுவரை சொல்லாத வார்த்தைகளையும் அன்பையும் பொழிகிறாள்..

மனம் அந்த சுகத்தை ரசிக்கிறது...
பொழியும் ஒவ்வொரு முத்தத்திலும் ஒரு புது சுகம்.....
பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் புது அர்த்தத்தை தருகிறது....

நரம்பெல்லாம் வீணை வாசிக்கின்றன....
விரல்களெல்லாம் நடுங்குகின்றன...
உதடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை பிடிக்கின்றன..
வய்ற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன

என்னை தவிர வேறு எவரும் இவ்வளவு சந்தோசமாக இங்கு இருக்கவே முடியாது...

ஹாரிஸ் ஜெயராஜின் 'உயிரே என் உயிரே' எங்கேயோ ஒலிப்பது கேட்கின்றது...


வியாழன், 21 மே, 2009

வெள்ளை பூக்கள்....

Song: Vellai pookal
Movie: Kannaththil Muththamittal
Lyrics: Vairamuthu
Singer: A R Rahman

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

குழந்தை விழிகட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிருமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையில் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனைகள் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாயிந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே

புதன், 1 ஏப்ரல், 2009

மனம்

மனம் ஒரு படியினை எட்டிவிட்டது ...
நீ இல்லாவிட்டலும் பரவாயில்லை என்கின்றது...
உள் மனம் உன்னை ஆழமாக நேசித்தாளும்..
வெளியே அது உன்னை மறுக்கின்றது....
நீயும் அதை அறிவாய்...
நானும் நன்கு அறிவேன்...
இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்கின்றோம்...
இது என்ன விதியா?
இல்லை மூடத்தனமா ?
நீயே சொல்லடி.... என் கண்மணி...

வெள்ளி, 13 மார்ச், 2009

நீ....

உன்னை நான் அடையத்தான் தவிக்கிறேன்...
தினமும் நினைத்து ஏங்குகிறேன்...
ஒரு நொடி என் விழிவிட்டு நீ பிரிந்தாலும்...
ஓர் வாழ்நாள் பிரிவை உணர்கின்றேன்...
என் அருகில் இரு...
என்னை அரவணை...
என் வாழ்வை முழுமையாக்கு....
நீ எனதாகு....